Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உ.பி.யில் இருதரப்பினர் மோதல்: 9 பேர் பலி

ஜுலை 17, 2019 03:24

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள கோராவால் பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.இந்த மோதலில் 3 பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார்,காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் நிலப்பிரச்சனை காரணமாக மோதல் ஏற்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரித்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்